Pages

Tuesday, October 14, 2014

ஐரோப்பாவில் புதிய அரசியல் சிந்தனையில் ஏற்பட்ட வளர்ச்சி

01) மானிட வாதம் என்றால் என்ன?
*அனைத்துக்கும் மேலாக மனிதன் மேலனவான் என்ற எண்ணக்கரு மானிட வாதமாகும்.


   பிரான்சியப் புரட்சி 


02) பிரான்சியப் புரட்சி என்றால் என்ன?
*கி.பி
1789 ஆம் ஆண்டு பிரான்சில் 16ஆம் லூயி மன்னனுக்கு எதிராக ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சி பிரான்சியப் புரட்சி எனப்படும்.

03) பிரான்சியப் புரட்சியின் அடிப்படை விடயங்கள் எவை?
*சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

  04) பிரான்சியப் புரட்சியின் அரசியல் காரணங்களை குறிப்பிடுக?
 *
14ஆம்  15ஆம்  16ஆம் லூயி மன்னர்கள் சர்வாதிகார முறை(14ஆம் லூயி  மன்னன் ‘’நானே அரசு’’ என்று கூறினான்.) இங்கு  நடைமுறைப்படுத்தப்பட்ட ‘லெத்ரே டி கச்சே’ என்ற முறையின் மூலம்    மன்னன் யாரையும் கைது செய்ய முடியும்.
மூன்றாம் பிரிவு (பொது மக்கள்) முதல் பிரிவினையும் (திருச்சபையினர்) இரண்டாம் பிரிவினையும் (பிரபுக்கள்) முதுகில் சுமப்பதாகக் காட்டும்
ஸ்டேட் ஜெனரல் 
*
 *பிரான்சின் பாரளமன்றமான  ‘ஸ்டேட் ஜெனரல்’ 1614லிருந்து  கூட்டப்படாமல் இருந்தாது.  இதனால் மக்கள் அதிருப்தி    அடைந்தனர்.
 *நீதித்துறை சீர்கேடு  அடைந்திருந்தமை. பிரதீசங்களுக்கு  பிரதேசம் 
வேறுபட்ட 360 சட்ட  முறைகள் காணப்பட்டன.
 *பொருளாதாரம் நலிவடைந்தமை. பல யுத்தம் காரணமாக    அதிகப்பணம் செலவாகியது. இதனால் மக்கள் வரிச்சுமையில் வாடினர்.
 *நிர்வாகம் சீர்திருத்தம் இடம்பெறாமை. 16ஆம் லூயி  மன்னகளின் ஆலோசகராக, 74 வயதுடைய மொரியா என்பவரே இருந்தார்.  இவர் சலுகைகை பெற்றவாரே எவ்வித முக்கிய சீர்திருத்தங்களை  செய்யவில்லை. டர்கோ, நேக்கர் போன்ற சிறந்த அமைச்சர்களை இவர்    பதவிவிலகச் செய்தார்.
 *16ஆம் லூயி மன்ன்னனின் மனைவி ஆஸ்திரியாவை சேர்ந்த மேரி  அன்டோயின்ட் அரச நிர்வாகத்தில் தேவையில்லாமல் தலையிட்டதால்  கமாக்கள் ஆத்திரமடைந்தனர்.

  05)  பிரான்சியப் புரட்சியின் பொருளாதார காரணங்களை குறிப்பிடுக?
 *அதிக வரிகள். பொதுமக்கள் அரசுக்கு அதிக வரிகள் செலுத்தியமை  பிரான்சியப் புரட்சிக்கான காரணமாகும். இவர்கள் தமது வருமானத்தில்  50% 
- 60% வரை வரிகட்ட வேண்டி இருந்தது.(வேலி வரி, கெப்பிடேசன், நீர்  வரி)
 *1786 இல் பிரான்ஸ் இங்கிலாந்துடன் ஈடன் உடன்படிக்கையை  மேற்கொண்டது. இதனை காரணமாக புடவை இறக்குமதிக்கான இறைவை  நீக்கப்பட்டது. இங்கிலாந்தின் இயந்திர உபயோகத்தினால் உற்பத்தி செலவு  குறைன்ஹது. எனவே பிரான்சின் சிறு கைத்தொழில்கள்  போட்டியிடாமையால் பிரான்சின் உற்பத்தி ஸ்தம்பிதம் அடைந்தது.
 *வெளிநாட்டு யுத்தம் காரணமாக அரச திறைசேரி வெருமையடைந்து.
 *பிரான்சிய மக்களில் 90 வீதத்தினர் விவசாயிகள் ஆவர் இவர்கள்  பிரப்புக்களின் நிலங்களில் பயிரிட்டதோடு இதற்கு வரி செலுத்தினர்.  மேலும் பிரபுக்கள் வயல்களில் குதிரைகளை கொண்டு செல்வர்.
 *வேலியடைப்பு காரணமாக விவசாயிகளின் கால்நடைகளுக்கான புற்றரை  இல்லாமல் போனமை புரட்சிக்கு காரணமாகும்.

 06) புரட்சிக்கான ஏனைய காரணக்களை குறிப்பிடுக?
 *18ஆம் ஆண்டு வாழ்ந்த ரூசோ, வோல்டெயர் மொண்டஸ்கியூ போன்ற  தத்துஞானிகளின்மானிடவாதக் கொள்கை.
 *இங்கிலாந்தில் இருந்த பாரளமன்ற ஜனநாயக முறை
 *கி.பி 1776 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்போர்.

டெனிஸ் அரங்கு 
 07) “டெனிஸ் மைதான  சத்தியப்பிரமாணம்”  என்றால் என்ன?
 *பிரான்சில் சலுகை  இழந்தவர்கள் டெனிஸ்    மைதானத்தில் ஒன்றுகூடி  புதிய அரசியல்  அமைப்பினை அறிமுகம்  செய்வதாக  உறுதியளித்தமை.
 
பஸ்டீல் சிறைக்கூடம்              
சத்தியப் பிரமாணம் 




               

   08) அவர்கள் எடுத்த உறுதி யாது?
 *நிலையான மக்கள் அரசாங்கத்தை ஏற்படுத்திய பின்பே அந்த இடத்தில்  இருந்து அகன்று செல்வதாக மக்கள் உறுதி எடுத்தனர்.

  09) கி.பி 1789 ஸ்டேட் ஜெனரல் கூட்டப் பட்டமைகான காரணம் யாது?
 *பிரான்சில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை ஈடு செய்வதற்கு.

  10) பஸ்டீல் சிறைச்சாலை தகர்க்கப்பட்டமைகான காரணத்தை தருக?
 *பிரான்சில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக மக்கள் வீதில் இறங்கி  ஆர்பாட்டம் 
 செய்யும் போது.

 11) இத்தாக்குதல் எப்போது ஏற்பட்டது?
 * கி.பி 1789 ஜூலை 14ஆம் திகதி
 12) பிரான்சில் மனித உரிமை சாசனம் எப்போது வெளியிடப்பட்டது?  அதில்  உள்ள விடயத்தை தருக?
 * கி.பி 1789 ஆகஸ்ட் 29ஆம் திகதி.

 * “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள். அவர்கள் சட்டம் இயற்றுவதில்  பங்கேற்ற வேண்டும். கருத்து வெளியிட அவர்களுக்கு உரிமை உண்டு.

16ஆம் லூயி
 13) பிரான்சில் புதிய யாப்பு  எத்தனையாம் ஆண்டு  உருவாகியது?
 *கி.பி
1791 ஆம் ஆண்டு

 1
4) 16ஆம் லூயி மன்னரும்  அவனது மனைவியும் அத்தனயாம்  ஆண்டு மரண தண்டைனைக்கு  உட்படுத்தப் பட்டனர்?
 கி.பி 1793 ஆம் ஆண்டு

 15) தேசிய வாதம் என்றால் என்ன?
 *குறிப்பிட்ட நிலப்பரப்பில்  குறிப்பிட்ட  ஒரே இயல்புகளை  கொண்ட மக்கள்  பொது நோக்கை  அடிப்படையாக கொண்டு ஒரே  குழுவாகத் தனது நிலையைக்  கட்டியெழுப்பதுவாகும்.
 16) லிபரல் வாதம் என்றால் என்ன?
 *மக்கள் பிரதிநிதியை கொண்ட சபையின் துணையுடன் உருவ்வாக்கப்பட்ட  அரசியல் அமைப்பின் மூலம் மக்களுக்கு சிறந்த ஆட்சியை அமைத்துக்  கொடுப்பதே.

 
16 லூயி மன்னனுக்கு மரண தண்டனை (அவனது தலையை வெட்டி மக்களுக்கு காட்டும் படம் )
மேரி அண்டோயிட்க்கு மரண தண்டனை 


   இத்தாலிய ஐக்கியத்தின்    

                       முக்கிய கட்டங்கள் 


 17) இத்தாலியை ஐக்கியப்படுத்த தடைகளாக அமைந்த காரணிகளை  தருக?
 *இத்தாலி ஆரம்பத்தில் பல கூறுகளாக பிரிந்திருந்தன.
 *வெவ்வேறு பிரதேசங்கள் வெவ்வேறு நாட்டு ஆதிக்கத்தின் கீழ்  இருந்தமை.
 *பாப்பரசர் கொண்டிருந்த எல்லையற்ற அதிகாரங்கள்.
 *இத்தாலிய மக்களிடம் 19ஆம் நூற்றாண்டு வரை தேசிய உணர்வுகள்  தோன்றாமை.

 1
8) இத்தாலியை தமது கீழ் வைத்து இருந்த அரசுகளையும்  பிரதேசங்களையும் தருக?
 *ஸ்பானிய – சிசிலி, நேப்பில்ஸ்
 *ஆஸ்திரியா – பர்மா, மொடினா, டஸ்கனி, வேனிஸ்
 *பாப்பரசரின் கீழ் – மத்திய இத்தாலி 
 *பிரப்புக்கள் – வேறு சில பிரதேசம்
 19) இத்தாலியை ஐக்கியப்படுத்த முன்வந்தவர்களை குறிப்பிடுக?
 *நெப்போலியன் பொனபாட்
 *ஜோசப்மசினி
 *கவுண்ட் கவூர்
 *கரிபால்டி.
 
நெப்போலியன் 
மசினி 

கவுன் கவூர் 
கடிபால்டி 


 20) நெப்போலியன் இத்தாலியை ஐக்கியப்படுத்த முயன்ற முறையை  குறிப்பிடுக?
 *கி.பி 1797 ஆமா ஆண்டு வட இத்தாலியில் இருந்த லொம்பாடி,  ஜெனோவா. நேப்பிள்ஸ் ஆகிய பிரதேசங்களை கைப்பற்றுதல்.
 *1807 ஆம் ஆண்டு பாபரசரின் கீழ் இருந்த இத்தாலியப் பிரதேசத்தைப்  பெற்று “வடஇத்தாலி” என்ற அரசை ஆரம்பித்து அதன் அரசனாக  முடிசூட்னான்.

 21) வடஇத்தாலி மீண்டும் பிளவுப்பட்டமைக்கான காரணத்தை  குறிப்பிடுக?
 *கி.பி 1815 நெப்போலியன் யுத்தத்தில் தோல்வி அடைந்ததுடன் வியன்னா  மகாநாட்டின் மூலம் அப்பிரதேசங்களை அவர்களிடம் வழங்கப்பட்டது.

 22) நெப்போலியனின் மனைவியின் பெயர் என்ன? அவள் ஆட்சி செய்த  பிரதேசம் எது?
 *மேரி லூயி
 *தஸ்கனி பிரதேசம்.

 23) காபொனரி இயக்கம் (கருஞ்சட்டை வீரர்) என்றால் என்ன?
 *இத்தாலியை மீண்டும் ஐக்கியப்படுத்த இரகசியமாக இணைவதற்கு  மேற்கொள்ளப்பட்ட இயக்கம்.

 24) இதன் தலைவர் யார்?
 *ஜோசப் மாசினி.
 25) காபொனரி இயக்கம் வீழ்ச்சிக் கண்டது எப்போது?
 *கி.பி 1825

 26) ஜோசப் மாசினி  உருவாக்கிய இயக்கம் எது?
 *இத்தாலி இளைஞர் இயக்கம்.

 27) இளம் இத்தாலி இயக்கத்தின் நோக்கம் யாது?
 *”ஒற்றுமையும் சுதந்திரமும்’’

 28) கவுன்ட் கவூர் இவ்வரசின் பிரதம மந்திரியாக எப்போது இருந்தார்?
 *இத்தாலியின் பீட்மன்ட்.
 *கி.பி
1852 ஆம் ஆண்டு.


   29)இவர் இத்தாலி மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த எழுதிய நூல்         எது?
  *மறு பிறப்பு.

  30) கவுன்ட் கவூர் ஆஸ்திரியாவுக்கு எதிராக பிரான்சுடன் செய்து    கொண்டஉடன் படிக்கை யாது?
 *புளோம்பியஸ் உடன்படிக்கை.

 31) அப்போர் முயற்சி தோல்வி அடைந்தமைக்கான காரணத்தை  குரிபிடுக?
 *பிரான்ஸ் மன்னனான 3ம் நெப்போலியன் ஆஸ்திரியாவுடன் விலாபிரங்கா  என்ற உடன்படிக்கையை செய்து கொண்டையால் படை உதவியை  நிறுத்தினான்.

 32) இத்தாலியை ஐக்கியப்படுத்தலில் வெற்றிகண்டவன் யார்?
 *கரிபால்டி.

 33)இவன் இத்தாலியை ஐக்கியப்படுத்திய முறையை குறிப்பிடுக?
 *கி.பி
1860 ஆண்டின் பின்னர் தனது செஞ்சட்டை வீரர் 1000 பேருடன்  சிசிலிக்கு சென்று மெசினாவை தவிர ஏனைய பிரதேசங்களை கைப்பற்றிய  பின் நேப்பிள்சையும் இனைத்தான். பிறகு மெசினாவும் அவனுடன்  இனைந்தது
 *யாவான் பிஸ்மாற்குடன் உடன்படிக்கை செய்து கொண்டான்.
 *கி.பி
1870 ஆண்டு பிரான்சிற்கும் ஜேர்மனுக்கும் போர் ஏற்பட்டதால்  பிரான்ஸ் ரோமில் பாப்பரசருக்காக வைத்திருந்த தமது படையினரை மீள  பெற போர் இன்றி பாப்பரசரின் அரசை இத்தாலியுடன் இணைக்க  முடிந்தது.

   ஜேர்மனிய ஐக்கியம் 


 34) ஜேர்மனி ஐக்கியத்துக்கு பங்களித்த மூவரை குறிப்பிடுக?
 *நெப்போலியன் பொனபாட்
 *மெட்டர்நிக்

 *ஒட்டோவான் பிஸ்மார்க்

ஒட்டோவான் பிஸ்மார்க்
 35) நெப்போலியன் ஜேர்மனி ஐக்கியத்துக்கு பங்களித்த வித்தை  குறிப்பிடுக?
 *நெப்போலியன் 1826இல் ஆஸ்திரியாவையும் 1806இல் பிரஸ்யாவையும்  1806 ஜேர்மனியில் செயற்பட்ட புனித உரோமப் பேரரசையும் தோற்கடித்து  றைன் கூட்டமைப்பை ஏற்படுத்தினான்.
 *றைன் கூட்டமைபால் மானிய முறையை நீக்கினான்.
 * நெப்போலிய சட்டக்கோவையை அரிமுகப் படுத்தினான்.

 *இவன் பொதுவறிக் கொள்கை மூலம் ஜேர்மனியின் வர்த்தகத்தை  வளர்ச்சியடைய செய்தது.

 36) இக்கூட்டமைப்பு மீண்டும் பிரியக் காரணம் யாது?
 *நெப்போலியனின் தோல்வியும் வியன்னா மகாநாட்டின் முடிவும் 

 37) மெட்டர்நிக் எந்நாட்டில் சான்சலர் பதவி வகித்தார்?
 *ஆஸ்திரியா

 38) இவர் ஜேர்மனி ஐக்கியத்திற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை  தருக?
 *அவர் தமது பிரதேசத்தில் மக்களிடையே எழுச்சி பெற்ற லிபரல்  வாதத்தை கட்டுப்படுத்தியமை.
 *கால்ஸ்பாட் எனும் ஆணையை நிறுவியமை.

 39) கி.பி 1843இல் பிரஸ்யாவை மையாமாக கொண்டு உருவான வர்த்தக  சங்கம் எது?
 *சொல்வரின் ( zollverein )


 ## கி.பி 1848 ஆண்டு பிரான்ஸில் ஏற்பட்ட புரட்சி காரணமாக ஜெர்மன் பிரதேசங்களிலும்  புரட்சியின் நோக்க்கமாகவே இருந்தது. ஜெர்மன் கூட்டமைப்பை முடிக்கு கொண்டு வந்து  லிபரல் வாத ஆர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. மெட்டர்நிக் சான்சிலர் பதவி விலகி  சீர்திருத்தங்களுக்கு இணங்கினார். பிரஸ்யாவிலும் புரட்சி வெற்றியளித்தது. இதனால்  லிபரல் வாத ஐக்கிய ஜேர்மன் அரசுகளினதும் பிதிநிதிகள் 500 பேர் பங்குபெற்றினர். ##

 40) லிபரல் வாத ஐக்கிய ஜெர்மனின் பாராளுமன்றம் எவ்வாறு  அழைக்கப்பட்டது?
 *பிராங்பாட்

 41) ஒட்டோவான் பிஸ்மார்க் ஜேர்மனியை ஐக்கியத்திற்கு பங்களித்த  விதத்தை குறிப்பிடுக?
 *இவன் பிரஷ்யாவின் கீழ் ஐக்கிய ஜேர்மனியை நிறுவதற்கு நடவடிக்கை  எடுத்தான்.
 *ஜேர்மனியின் இராணுவ பலத்தை கட்டி எழுப்பினான்.
 *பிஸ்மார்க் ஆஸ்திரியாவை தனிமை படுத்தும் முகமாக பிரான்ஸ்,  இத்தாலி ஆகிய நாடுகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டான்.
 * கி.பி 1866 இல் பிரஸ்யாவும் ஆஸ்திரியாவும் இடையே ஏற்பட்ட    யுத்தத்தில் ஆஸ்திரியா தோல்வியடைந்தது. ஜேர்மன் கூட்டமைப்பு  கலைக்கப்பட்டு புதிய யாப்பு உருவானது.அதன் முக்கிய அமைச்சராக  பிஸ்மார்க் விளங்கினான்.
 *பின்பு அது வட ஜெர்மன் கூட்டரசாக விளங்கியது. அதில் பிஸ்மார்க்  சான்சிலர் பதவி வகித்தான்.
 *பவேரியா, வூட்டம்பேக், பேடின் பிரதேசங்கள் தென் ஜேர்மன்    கூட்டமைப்பில் இனைந்தன.

 42)கடைசியில் ஜேர்மன் அரசு உருவான விதத்தை சுருக்கமாக தருக?
 * கி.பி 1871.01.18 ஆம் திகதி வேர்சேல்ஸ் மாளிகையில் கண்ணாடி  மண்டபத்தில் வடஜேர்மனி கூட்டமைப்பையும் தென்ஜேர்மனி  கூட்டமைப்பையும் ஒன்றிணைத்து ஜேர்மனி பேரரசு உருவானது.

வேர்சேல்ஸ் மாளிகையில் கண்ணாடி  மண்டபத்தில் 

    ரஷ்யப் புரட்சி 

 43) பொதுவுடமை வாதம் என்றால் என்ன?
 *மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புக்களை வழங்கி உற்பத்தியின் பயனை  அனைவரிடையேயும் சமமாக பங்கிட்டு செய்யும் பொருளாதார அரசியல்  முறையே பொதுவுடைமையாகும்.
 
 44) ரஷ்யப் புராட்சி என்றால் என்ன?
 *ரஷ்யாவில் காணப்பட்ட சர்வாதிகார மானிய முறை சார் ஆட்சிக்கு  எதிராக விவசாயிகள் தொழிலாளர் வகுப்புக்கள் எழுச்சி பெறல்.
 *இறுதியில் ரஷ்யாவில் பொதுவுடமை வாத ஆட்சி முறையொன்று  உருவாதல் ரஷ்யப் புரட்சி எனும் பெயரில் அழைக்கப்படும்.
 
 45) ரஷ்யப் புரட்சியின் மூன்று சந்தர்பங்களையும் தருக?
 *1905 ஆம் ஆண்டு புரட்சி
 *1917 ஆம் ஆண்டு மார்ச் புரட்சி
 *1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி
 
 46) ரஷ்யப் புரட்சிக்கான காரணங்களை குறிப்பிடுக?
 *சர்வதிகார ஆட்சி

 *தொழிலாளர்களுக்கு உரிமைகள் கிடைக்காமை.
 *பிரபுக்களும்  மதகுருமார்களும் ஆடம்பரமாக வாழ்ந்தமை.
 *ரஷ்யா அடைந்த தோல்விகள்.
 
 47) ரஷ்யாவின் சர்வாதிகார முறையை விளக்குக?
 *2
ம் 3ம் அலெக்சாண்டர் மன்னர்களும் சார் மன்னர்களும் சர்வாதிகளாக  விளங்கினர். 3ம் அலெக்சாண்டர் மன்னர் அரசாங்கத்தை விமர்சிப்பத்தையும்,  கூட்டங்கள் கூடுவதையும் கருத்து வெளியிடுவதையும் தடை செய்தான்.  பானின் விலையை அதிகரித்தான். இதனால் மக்கள் உணவின்றி  தவித்தனர்.
 48) ரஷ்யாவின் தொழிளாலர் உரிமை முறையை விளக்குக? 
 *ரஷ்யாவில் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உரிமைகள்  வழங்கப்படவில்லை.
 அவர்களது உழைப்புக்கு ஏற்ற வருமானத்தையும் வழங்கவில்லை.  இதானால் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி செய்தார்கள்.    1910இல் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மொஸ்கோவில் பவேளை  நிறுத்தம் செய்தனர். 1913இல் 12இலட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றினர். 1917 ஒக்டோபர் 10 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர்.

 49) ரஷ்யாவின் பிரபுக்களும்  மதகுருமார்களும் ஆடம்பரமாக வாழ்ந்த  முறையை விளக்குக?
 *அரசன் பிரபுக்களுக்கு நீதி அதிகாரங்களை வழங்கினான். இதனால்  செல்வாக்கு உள்ளவர்களாகவும் செல்வந்தர்களாகவும் விளங்கினர்.  ரஷ்யாவில் ஒத்தடொக்ஸ் திருச்சபைக்கு பணிந்து நடப்பவனாக மன்னன்  மாறினான்.சனத்தொகையில் 97% மாக இருந்த சாதாரண மக்கள் ஏழ்மை,  உணவு பற்றாக்குறை போன்ற இன்னல்களை அனுபவிக்க பிரபுக்களும்  மதகுமாருகளும் ஆடம்பர வாழ்கை வாழ்ந்தமை புரட்சிக்கு வழிவகுத்தது.

 50) ரஷ்யா அடைந்த போர் தோல்விகளை பற்றி விளக்குக?
 *1905 இல் ரஷ்யா – ஜப்பான் யுத்தத்தில் தோல்வியடைந்தது. 1914 இல்  1வது  உலக யுத்தத்தில் ஜேர்மனியால் தோற்கடிக்கப்பட்டது.இதனால்  ரஷ்யாவின் பொருளாதாரம் நலிவுற்றது. திறைசேரியும் வீழ்ச்சியடைந்தது.  சனத்தொகை வளர்ச்சியடைய வேலையின்மை அதிகரித்தது.

 51) ரஷ்யாவில் நிலமானிய அடிமை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிய  மன்னன் யார்?
*2
ம் அலெக்ஸ்சாண்டர் மன்னர்.

52) 2ம் அலெக்ஸ்சாண்டர் மன்னர் மன்னரை யார்? எப்போது கொலை செய்தனர்?
 *’கறுப்புப் பிரிவினர்’
 *கி.பி 1878.

 53) ரஷ்யாவுக்கு பொதுவுடமையை அறிமுகம் செய்தவர் யார்?
 *பெலகாநோவ்.

 54ரஷ்யாவில் முதல் மார்க்ஸீய அமைப்பு எது?
 *’உழைப்பாளர் புரட்சிக் குழு’

 55) விஸிட்மீர் லெலின் தலைமை வகித்த வேலை நிறுத்தம் யாது?
 *பருத்தி தொழிற்சாலை தொழிலாளர்களின் வேளை நிறுத்தம்.

 56) ’உழைப்பாளர் புரட்சிக் குழு’ இரு பிரிவாக பிரிவதற்கு காரணம்  யாது?
 *லெலின் இக்குழுவை தொழிலாளர் கட்சியாக ஒழுங்கமைக்க  படவேண்டுமென வலியுறுத்த டிரொஸ்கி, மார்டொவ் எனபவர்  இக்கருத்தை ஏற்கவில்லை.

லெலின் இன் பிரச்சாரம் 
 57) இதனால் ஏற்பட்ட  பிரிவினர் எவை?
 *லெலின் கருத்தை ஏற்றுக்  கொண்ட பிரிவினர்  போல்ஷவிக் எனவும்.
 *மற்றைய குழு  மென்ஸவிக் எனப்பட்டர்.

 58) ரஷ்யாவின் சட்டசபை  எவ்வாறு  அழைக்கப்பட்டது?
 *’டூமா’  என்றழைக்கப்பட்டது.

 59) முதல் டூமா எப்போது  எங்கு அமைக்கப்பட்டது?
 *1906 ஆம் ஆண்டில் பீட்டர்ஸ்பர்க் நகரில்
போல்ஷவிக் படையினர் 

60) ரஷ்யப் புரட்சியின் விளைவை தருக?
*ரஷ்யாவினல் சர்வாதிகார ஆட்சி 1917.03.15 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
*திட்டமிட்ட பொருளாதார முறை அறிமுகமாகியது.
*பாட்டளிவர்க்க சர்வாதிகார ஆட்சி  ரஷ்யாவில் ஏற்பட்டது. அதன் ய்தளைவர் லெலின் ஆவர்.
 *ஐக்கிய அமெரிக்கவுக்கு இணையான ரூ வல்லரசாக ரஷ்யா படிப்படியாக  வளர்ச்சியடைந்தது.
 *தனியாருக்குச் சொந்தமான சொத்துக்கள் தேசிய உடமையாக  மாற்றப்பட்டன.
 *உலகில் முதல் பொதுவுடமை நாடக மாறியது. பின் சீனா, வியட்னாம்,  வடகொரியா, முதலிய நாடுகளும் மாறின.

0 comments:

Post a Comment