Pages

Tuesday, October 14, 2014

ஐரோப்பாவில் புதிய அரசியல் சிந்தனையில் ஏற்பட்ட வளர்ச்சி

01) மானிட வாதம் என்றால் என்ன?
*அனைத்துக்கும் மேலாக மனிதன் மேலனவான் என்ற எண்ணக்கரு மானிட வாதமாகும்.


   பிரான்சியப் புரட்சி 


02) பிரான்சியப் புரட்சி என்றால் என்ன?
*கி.பி
1789 ஆம் ஆண்டு பிரான்சில் 16ஆம் லூயி மன்னனுக்கு எதிராக ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சி பிரான்சியப் புரட்சி எனப்படும்.

03) பிரான்சியப் புரட்சியின் அடிப்படை விடயங்கள் எவை?
*சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

  04) பிரான்சியப் புரட்சியின் அரசியல் காரணங்களை குறிப்பிடுக?
 *
14ஆம்  15ஆம்  16ஆம் லூயி மன்னர்கள் சர்வாதிகார முறை(14ஆம் லூயி  மன்னன் ‘’நானே அரசு’’ என்று கூறினான்.) இங்கு  நடைமுறைப்படுத்தப்பட்ட ‘லெத்ரே டி கச்சே’ என்ற முறையின் மூலம்    மன்னன் யாரையும் கைது செய்ய முடியும்.

Saturday, October 11, 2014

வரலாற்றுக்கு ஓர் அறிமுகம்

 1) வரலாறு என்றால் என்ன? 

* கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையே முடிவற்ற பேச்சு 

2) வரலாற்று பாட பரப்பினுள் அடங்கும் செயற்பாடுகள் எவை?

*அரசியல், பொருளாதாரம், சமயம், கலாசாரம், இலக்கியம், கலை, சட்டம், விஞ்ஞானம் 

3) ஜீ. எம் திரவிலியன் அவர்களின் வரலாற்று கருத்தை கூறுக?

*வரலாறு என்பது பல அறிவுத் துறைகள் கூடி வாழும் இல்லம் 
*ஒரு தனித்த பொருள் அல்ல;மாறாக எல்லாவித பொருள்கள் பற்றிய இயல்புகளும், துறைகளும் வாழ்கின்ற ஒரு மாளிகை 

4)  வரலாறு கற்பதன் பயன்கள் எவை?

*சமூகம் மற்றும் உலகம் பற்றிய தெளிவை பெறல்
*இறந்த காலத்தின் ஊடக நிகழ்காலத்தை விளங்கி எதிர்காலத்தை கட்டியெலுப்புதல் 
*தேசியத்துவத்தை அறிந்து கொள்ளல் 
*ஏனைய கலாசாரங்களை மதித்தல் 
*பல்வேறு கருத்துக்களை சகித்தல் 
*தர்க்க ரீதியான சிந்தனைகள் வளர்ச்சி அடைதல்

Monday, March 24, 2014

இந்தியாவின் வரலாற்று ரீதியான வளர்ச்சி

  இந்தியாவின் ஆரியக் குடியேற்றங்கள் 


01) ஆரியரின் பூர்விக இடம் எது?
* மத்திய ஆசியாவில் உள்ள ஸ்டெப்ஸ் புல் நிலம் 

02) ஆரியர்கள் எக்கணவாய் ஊடக இந்தியாவுக்கு வந்தனர்?
* கைபர் கணவாய் 

03) இவர்கள் முதலில் குடியேறிய பிரதேசம் எது?
* சிந்துநதிப் பள்ளத்தாக்கை அண்மித்த தற்போதைய பஞ்சாப் பிரதேசம் 

04) ஆரியரின் குடிப்பெயர்வு, குடிப்பரம்பல் பற்றிய விபரங்களை அறிந்துக்கொள்ள துணைபுரியும் சாதனங்கள் எவை?
*வேதநூல்கள்,பிராமணங்கள், உபதிடங்கள், புராணங்கள், மகாபாரதம்.

05) வேதநூல்கள் சிலவற்றை குறிப்பிடுக?
* இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் 

06) முந்திய வேதக் காலம் மற்றும் பிந்திய வேதக் காலம் என்றால் என்ன?
* ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து குடியேறிய காலம் 
* அவர்கள் பரவத் தொடங்கிய பின்னரான காலம்